பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்ட ருவன் விஜேவர்தன பாதுகாப்பு அமைச்சில் இன்று (24) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அமைச்சுக்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சரை பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ தலைமையில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
சமய தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் சுபநேரத்தில் முதலாவது ஆவணத்தில் கையொப்பமிட்ட ருவன் விஜேவர்தன தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன, தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ த சில்வா உட்பட இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவின் குடும்ப உறவினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(ஸாதிக் ஷிஹான்)
from tkn