ஆஸி அணியில் மாற்றமில்லை

இந்தியாவிற்கு எதிராக நாளை தொடங்கும் பேர்த் டெஸ்டிற்கான அவுஸ்திரேலியா ஆடும் 11 பேர் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

அவுஸ்திரேலிய -− இந்திய அணிகளுக்கிடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் பேர்த்தில் இன்று தொடங்குகிறது.

உலகின் அதிவேக ஆடுகளத்தைக் கொண்ட பேர்த் மைதானம். இங்குள்ள ஆடுகளத்தில் பந்துகள் அதிக அளவில் பவுன்சராகவும், வேகமாகவும் செல்லும். இதனால் துடுப்பாட்ட வீரர்கள் அதிக அளவில் திணறுவார்கள். தற்போது பேர்த்தில் வெளியிடத்தில் வைத்து தயார் செய்யப்பட்ட ஆடுகளத்தை பயன்படுத்த இருக்கிறார்கள். முதன்முறையாக இந்த ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது.

பொதுவாக பேர்த் ஆடுகளத்தில் புற்கள் அதிக அளவில் இருக்காது. இதனால் பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கும். ஸ்விங் பெரிய அளவில் இருக்காது. ஆனால் தற்போது ஆடுகளம் புற்கள் நிறைந்து காணப்படுகிறது. நாளைய ஆட்டத்திற்கு ஆடுகளம் ஒப்படைக்கப்படும்போது புற்கள் பெரிய அளவில் வெட்டப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஆடுகளம் எப்படி செயலாற்ற போகிறது என்று எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. பவுன்ஸ், வேகத்துடன் ஸ்விங் இருக்கும் என ஆடுகள பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனால் அவுஸ்திரேலியா ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட் ஆகியோருடன் வேகப்பந்து சகலதுறை வீரரான மிட்செல் மார்ஷ் சேர்க்கப்படலாம் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் அடிலெய்டில் விளையாடிய அதே 11 பேர்தான் பேர்த்தில் களம் இறங்குவார்கள். அவுஸ்திரேலியா அணியில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேர்த் டெஸ்டில் விளையாடும் அவுஸ்திரேலியா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. மார்கஸ் ஹாரிஸ், 2. ஆரோன் பிஞ்ச், 3. உஸ்மான் கவாஜா, 4. ஷான் மார்ஷ், 5. டிராவிஸ் ஹெட், 6. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், 7. டிம் பெய்ன், 8. ஹசில்வுட், 9. பட் கம்மின்ஸ், 10. நதன் லயன், 11. மிட்செல் ஸ்டார்க்.

Fri, 12/14/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை