ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றியதாலேயே முதலிடத்தைப் பெற்றேன்

ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றியதாலேயே மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற முடிந்தது என வவுனியா மாவட்டத்தில் கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற டிலாஜினி சண்முகேஸ்வரராஜா தெரிவித்தார்.

வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த டிலாஜினி சண்முகேஸ்வரராஜா 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ளார். தனது பரீட்சைப் பெறுபேறு குறித்து கூறும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

வெளியாகிய பரீட்சைப் பெறுபேற்றில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றமை மகிழ்ச்சியாக இருக்கின்றது. சென்ற வருடம் பரீட்சை எழுதியவர்களின் பெறுபேறு வந்த போது நானும் அடுத்த முறை முதலாவதாக வர வேண்டும் என நினைத்தேன். அதற்கு ஏற்றாற் போல் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றினேன். இந்த வெற்றிக்கு எனது தனியார் கல்வி நிலைய ஆசிரியர்களே காரணம். அவர்களது வழிகாட்டுதல்களையே பின்பற்றினேன். பாடசாலை ஆசிரியர்களும் உதவியிருந்தார்கள். சட்டத்துறையில் படித்து ஒரு சட்டத்தரணியாக பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்.

நான் இந்த நிலைக்கு வர வழிகாட்டிய ஆசிரியர்கள்மற்றும்எனது குடும்பத்தினர்என அனைவருக்கும் எனது நன்றிகள் எனத் தெரிவித்தார்.

(வவுனியா விசேட நிருபர்– கே. வசந்தரூபன்)

Mon, 12/31/2018 - 14:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை