பாடசாலை சீருடை வவுச்சர்; செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

Rizwan Segu Mohideen

பாடசாலை வவுச்சர்களின் காலாவதியாகும் திகதி எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்

இம்மாதம் 31 ஆம் திகதி நிறைவடையவிருந்த, மாணவர்களுக்கான பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களின் கால எல்லையே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாடசாலை விடுமுறை நிறைவடையும் முன்னர், சீருடை வவுச்சர்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் அவர் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதுமுள்ள 40 இலட்சம் மாணவர்களுக்கான பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களையும் விடுமுறை நிறைவடைவதற்கு முன்னர் விநியோகித்து நிறைவு செய்யுமாறு அவர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Fri, 12/21/2018 - 17:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை