இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பலஸ்தீன சிறுவன் பலி

இஸ்ரேலுடனான காசா எல்லையில் வழக்கமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

அந்த சிறுவன் செவ்வாக்கிழமை இரவு உயிரிழந்ததாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் குத்ரா குறிப்பிட்டுள்ளார். “நான்கு வயது எட்டு மாதங்களான அஹமது அபூ அபெத் என்ற சிறுவன் கான் யூனிஸில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்தான்” என்று அல் குத்ரா குறிப்பிட்டுள்ளார்.

அபூ அபெத்தின் தந்தை வெள்ளிக்கிழைமை ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் அந்த சிறுவன் மீது கூர்மையான பொருள் தாக்கியது. சிறுவனின் இறுதிக் கிரியை நேற்று இடம்பெற்றது.

தற்போது இஸ்ரேலாக உள்ள தமது பூர்வீக பூமிக்கு திரும்பும் உரிமையைக் கூறியே பலஸ்தீனர்கள் எல்லையில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இதுவை 195 பலஸ்தீனர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

Thu, 12/13/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை