பந்தை சேதப்படுத்தும்படி வோர்னர் என்னைத் தூண்டினார்

கமரூன் பான்கிராப்ட்

கேப்டவுன் டெஸ்டில் பந்தை சேதப்படுத்தும்படி துணைத் தலைவராக இருந்த வோர்னர் என்னைத் தூண்டினார் என கமரூன் பான்கிராப்ட் தெரிவித்துள்ளார். தென்ஆபிரிக்கா - அவுஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது.

இந்த போட்டியின்போது அவுஸ்திரேலிய அணி வீரர் கமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்துவதற்கு துணைத் தலைவர் வோர்னர்தான் காரணமாக இருந்தார் என்றும், இந்த விஷயம் ஸ்மித்திற்கு தெரிந்திருந்தது எனவும் விசாரணையில் தெரிய வந்தது. இதனால் பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு தலா ஓராண்டு தடையும் விதித்தது அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை

தென்ஆபிரிக்கா - அவுஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது அவுஸ்திரேலிய அணியின் கமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது.

பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்துவதற்கு துணைத் தலைவர் வார்னர்தான் காரணமாக இருந்தார் என்றும், இந்த விஷயம் ஸ்மித்திற்கு தெரிந்திருந்தது எனவும் விசாரணையில தெரிய வந்தது.

இதுகுறித்து பான் கிராப்ட் கூறுகையில் ‘‘நாங்கள் களத்தடுப்பு செய்து கொண்டிருக்கும்போது வோர்னர் என்னிடம் வந்து பந்தை சேதப்படுத்தும்படி கூறினார். அது நல்லதா? என்று எனக்குத் தெரியவில்லை.

ஏனென்றால், நான் இளம் வீரர் என்பதால் அணியில் தன்னுடைய மதிப்பு என்ன என்பதை யோசிக்க வேண்டியிருந்தது. சிரேஷ்ட வீரர்களிடம் இருந்து மரியாதை பெற வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.

மேலும் தவறுக்காக மிகப்பெரிய விலைக்கொடுக்க போகிறோம் என்பதையும் உணர்ந்திருந்தேன்’’ என்றார்.

Fri, 12/28/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை