இலங்கை கிரிக்கெட் சபை இடைக்காலத் தலைவராக மஹானாம

இலங்கை கிரிக்கெட் சபை கலைக்கப்பட்டுள்ள நிலையில் புதிய கிரிக்கெட் சபைத்தெரிவுக்கான தேர்தல் மார்ச் மாதம் அளவில் நடைபெறும் என கூறப்பட்டுள்ள நிலையில் இதுவரை இடைக்காலத்தலைவராக இலங்கை அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய ICC போட்டி மத்தியஸ்தருமான ரொஷான் மாஹானமவை புதிதாக நியமிக்கப்பட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ நியமிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தவிர இலங்கை கிரிக்கெட்டின் அபிவிருத்திக்காக முன்னாள் வீர்ர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோரால் வழங்கப்பட்ட அறிக்கையை உதாசீனம் செய்யப்பட்டதாகவும் மறுபடியும் அவ்வாறு நடக்க தான் விடப்போவதில்லை என்றும் குறிப்பிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ, மூவருக்கும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

ரொஷான் மஹானாம ICC உடன் செயற்பட்டவர். இலங்கை கிரிக்கெட் சபைத்தலைவர் பதவிக்கு அவரே பொருத்தமானவர் என ஹரீன் பெர்ணான்டோ மேலும் தெரிவித்தார்.

இதேவேளை க்ரேம் லப்ரோய் தலைமையிலான கிரிக்கெட் தேர்வுக்குழு களைக்கப்பட்டு அசந்த டி மெல் தலைமையிலான புதிய தேர்வுக்குழு கடந்த மாதமே புதிதாக நியமிக்கப்பட்ட நிலையில் சித்தத் வெத்திமுனி தலைமையிலான புதிய தேர்வுக்குழு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. ICC யின் பிரதிநிதிகளை தான் சந்திக்கவுள்ளதாகவும் ICC யின் ஊழல் தடுப்பு பிரிவை இலங்கையிலிருந்து செயற்பட அழைப்பு விடுக்க உள்ளதாகவும் புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் மேலும் தெரிவித்தார்.

அஸாப் மொஹமட்
 

Sun, 12/23/2018 - 17:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை