திருகோணமலை மாவட்ட அரச சேவை உத்தியோகத்தர்களுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டி

திருகோணமலை மாவட்ட அரச சேவை உத்தியோகத்தர்களுக்கிடையிலான விளையாட்டு போட்டியின் இறுதிப்போட்டி நிகழ்வுகள் அண்மையில் திருகோணமலை மெக்கேசர் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. ஆண்களுக்கான பட்மின்டன் போட்டியில் சம்பியனாக திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச அணியினரும் 2ம் இடத்தை திருகோணமலை மாவட்ட செயலக அணியினரும் பெற்றுக்கொண்டனர்.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச அணியில் வைத்தியர் தங்கவேல் நிலோஜன்,பொறியியலாளர் தயசிங்கம் நிவேதனும் திருகோணமலை மாவட்ட செயலக அணியில் நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஜன்,மாவட்ட அளவீட்டு நியமங்கள் பரிசோதகர் பி.ராஜேஸ்வரனும் பங்குபற்றியிருந்தனர்.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. அருந்தவராஜா ,கந்தளாய் பிரதேச செயலாளர் கே.பி.பிரேமதாசா மற்றும் மொரவெவ பிரதேச செயலாளர் பாத்திய விஜயந்த ஆகியோர் கிண்ணங்களை வழங்கி வைத்தார்கள்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் )

Sat, 12/29/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை