தலவாக்கலையில் தீ; கடை எரிந்து நாசம்

தலவாக்கலை பஸ் நிலையத்திற்கு பின் பகுதியிலுள்ள சில்லறை கடையொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இத் தீ விபத்து நேற்று (30) அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

தலவாக்கலை பொலிஸார், மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 2 மணி நேரத்தின் பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஹற்றன் சுழற்சி நிருபர்

Mon, 12/31/2018 - 09:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை