படையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணிகள் நேற்று விடுவிப்பு

முல்லைத்தீவில்

முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டன.

இதற்கான ஆவணங்களை முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடம் பாதுகாப்புப் படைகளின் முல்லைத் தீவு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு நேற்று (18)

கையளித்தார்.யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.இதன்படி, முல்லைத்தீவு மாவ ட்டத்தில் படையினரின் பயன்பாட்டிலிருந்த ஒரு தொகுதி காணிகள் நேற்று (18) விடுவிக்கப் பட்டன.இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளுக் கான ஆவணங்களை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடமும், மாவட்டத்தின் வன வள பாதுகாப்பு திணைக்கள அதிகாரி பண்டாரவிடமும் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் நத்தார் தின நிகழ்வும் நேற்று மாலை 7 மணிக்கு முல்லைத்தீவு புனித இராயப்பர் தேவாலயத்தில் நடைபெற்றது. விசேட ஆராதனைகளுடன் ஆரம்பமான நத்தார் தின நிகழ்ச்சியையடுத்து காணிகளைக் கையளிப்பதற்கான ஆவணங்கள் கையளிக்கப் பட்டன.இதன்படி, முல்லைத்தீவு மாவட்டத் தில் வற்றாப்பளை பகுதியில் 06 ஏக்கர் தனியார் காணியும் சிலாவத்தை பகுதியில் 01 ஏக்கர் தனியார் காணியும் உப்புமாவெளியில் 10 .05 ஏக்கர் தனியார் காணியும் செம்மலைப் பகுதி யில் 10 ஏக்கர் தனியார் காணியும் கோம்பாவில் பகுதியில் 03 ஏக்கர் காணியும் வள்ளிபுனம் பகுதியில் 02 ஏக்கர் காணியும் புதுக்குடியிருப்பு கிழக்குப் பகுதியில் 01 ஏக்கர் காணியும் உள்ளட ங்கலாக 52.14 ஏக்கர் காணி படையினரால் நேற்று விடுவிக்கப்பட்டது.

பரந்தன் குறூப் நிருபர்

 
Wed, 12/19/2018 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை