ஜப்பான் உணவகத்தில் தீ: 40க்கு மேற்பட்டோர் காயம்

ஜப்பான் நாட்டில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 40க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஹொக்காடோ என்ற தீவுப் பகுதியில் உள்ள உணவு விடுதியில் மர்மப்பொருள் வெடித்துச் சிதறியதில் உணவருந்திக் கொண்டிருந்தவர்களும், ஊழியர்களும் படுகாயமடைந்தனர். மர்மப் பொருள் வெடித்ததில் உணவகம் தீப்பற்றி எரிந்து உருக்குலைந்தது.

வெடித்த பொருள் மற்றும் அதன் தன்மை குறித்தும் தீவிரவாதத் தாக்குதல் காரணமா எனவும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

வெடிப்பு வலுவாக இருந்ததால் பக்கத்தில் உள்ள கட்டடங்கள் சாய்ந்தன என்றும் அதிகாரிகள் கூறினர். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் வெடிப்பைத் தொடர்ந்து எரிவாயு வாசனை உணரப்பட்டதாகக் கூறினர்.

வெடிப்பால் உணவகத்தின் கண்ணாடிகள் உடைந்ததாக அங்கு வேலை பார்க்கும் ஒருவர் தெரிவித்தார். இன்னொருவர் வெடிச்சத்தம் போல் அந்த வெடிப்பு கேட்டதாகக் கூறினார்.

Tue, 12/18/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை