ஆஸிக்கு எதிரான 3-வது டெஸ்ட் : ராகுல், முரளி விஜய் நீக்கம்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியில் கே எல் ராகுல், முரளி விஜய் நீக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியா - - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா வெற்றிபெற்றது. பெர்த்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது. இதனால் தொடர் 1--1 சமநிலையில் உள்ளது. பொக்சிங் டே’ டெஸ்ட் என அழைக்கப்படும் 3-வது போட்டி மெல்போர்னில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் 2 டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கே எல் ராகுல், முரளி விஜய் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரர்களாக மயங் அகர்வால், அனுமான் விஹாரி களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உமேஸ் யாதவுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். ஹர்த்திக் பாண்டியா, ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளனர்.

3-வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள 12 பேர் கொண்ட இந்திய அணி:-

விராட் கோலி, ரகானே, மயங் அகர்வால், அனுமான் விஹாரி, புஜாரா, ரோகித் சர்மா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, இஷாந்த் சர்மா, பும்ரா

Wed, 12/26/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை