1.2kg நிறையுடைய போதைப்பொருளுடன் இந்தியர் கைது

பயணப்பொதியில் சூட்சுமமாக மறைத்த நிலையில் ரூ. 2 மில்லியன் பெறுமதியான 1.28 கிலோ கிராம் நிறையுடைய ஹஸீஸ் வகை போதைப் பொருளுடன் பெங்களூரிலிருந்து வந்த இந்தியர்(30) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றிரவு பி.ப. 7.45 க்கு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகலையடுத்து இவர் கைதுசெய்யப்பட்டார். இவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. 

Mon, 12/31/2018 - 10:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை