புதையல் தோண்டிய 07 பேருக்கு விளக்கமறியலில்

திருகோணமலை – மொறவெவ சாந்திபுரம் ஆண்டியாகல வனப்பகுதியில் புதையல் தோண்டிய ஏழு பேரை அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க நேற்றுமுன்திம் (22) உத்தரவிட்டார்.

தெஹியோவிட்ட, மஹதிவுல்வெவ, வாழைத்தோட்டம் மற்றும் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த ஏழு பேரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மொறவெவ சாந்திபுரம் பகுதியில் புதையல் தோன்றிய போதே பொலிஸ் விசேட அதிரடைப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்து மொறவெவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 7 கையடக்க தொலைபேசிகள் வான் மற்றும் புதையல் தோணடுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பலவற்றினையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் தினகரன் நிருபர் 

Mon, 12/24/2018 - 11:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை